உள்ளூர் செய்திகள்

முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-03-29 08:18 GMT   |   Update On 2023-03-29 08:18 GMT
  • முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • இது தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமங்கலம்

திருமங்கலம் அருகே உள்ள தென்பழஞ்சி பகுதியை சேர்ந்தவர் பாண்டி(வயது 77). இவருக்கு கோமதியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். மகன் மற்றும் மகள்களுக்கு திருமணமாகி விட்டது. திருமணமான ஒரு மகளின் வீட்டில் பாண்டி தனது மனைவியுடன் வசித்து வந்தார்.

பாண்டிக்கு சொந்தமான தோட்டம் தென்பழஞ்சி பகுதியில் இருக்கிறது. நேற்று இரவு தோட்டத்திற்கு சென்ற அவர், இன்று காலையில் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர், தோட்டத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு பாண்டி தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

பாண்டி கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதித்து அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன வேதனையடைந்து அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News