உள்ளூர் செய்திகள்

மூதாட்டி சாவு

Published On 2023-06-14 08:18 GMT   |   Update On 2023-06-14 08:18 GMT
  • மதுரை அருகே மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
  • திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை மேலகோபுரதெரு சென்ட்ரல் சினிமா தியேட்டர் அருகில் மூதாட்டி ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ரோட்டில் விழுந்து கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மேல் மதுரை கிராம உதவியாளர் சமையன் திலகர்திடல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில், இறந்த மூதாட்டி தூத்துக்குடி காந்திநகரை சேர்ந்த கருப்பையா என்பவரின் மனைவி ஜீவா(வயது 60) என்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News