உள்ளூர் செய்திகள்

பிளஸ்-2 மாணவி-வாலிபர் தற்கொலை

Published On 2023-04-18 08:52 GMT   |   Update On 2023-04-18 08:52 GMT
  • பிளஸ்-2 மாணவி-வாலிபர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
  • பாலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டி என்.ஜி.ஓ. நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி கருப்பாயி. இவர்களது இளைய மகள் அன்னலட்சுமி. பிளஸ்-2 தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்தார். தேர்வு சரியாக எழுதவில்லை என வீட்டில் இருந்தவர்களிடம் கூறி வருத்தப்பட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த டி.கல்லுப்பட்டி போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை பாலமேடு, வ.உ.சி தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 29). இவருக்கு நீண்ட காலமாக தீராத வயிற்று வலி தொல்லை இருந்து வந்தது. இதற்காக அவர் பல இடங்களில் மருத்துவம் பார்த்தார். ஆனாலும் நோய் குணம் ஆகவில்லை. எனவே வாழ்க்கையில் விரக்தி அடைந்த முத்துக்குமார், சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பாலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News