உள்ளூர் செய்திகள்

இளம்பெண்ணிடம் ரூ.2 லட்சம் நூதன மோசடி

Published On 2023-03-14 08:00 GMT   |   Update On 2023-03-14 08:02 GMT
  • பரிசு அனுப்புவதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.2 லட்சம் நூதன மோசடி செய்யப்பட்டது.
  • வங்கி கணக்கில் இருந்து ரூ. 1 லட்சத்து 30 ஆயிரத்தை அனுப்பினார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே உள்ள வேளாங்குளத்தை சேர்ந்தவர் பிரசாத். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவுசல்யா (வயது30). கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு புதிய எண் மூலம் குறுஞ்செய்தி வந்தது. அதில் வெளிநாட்டில் வேலை பார்க்கும் பிரசாத்தின் நண்பர் என தகவல் அனுப்பப்பட்டி ருந்தது. இதனை நம்பி கவுசல்யாவும் அவ்வப்போதும் அந்த எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி வந்தார்.

கடந்த 7-ந் தேதி அந்த எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்தது. தனது மகளுக்கு பிறந்தநாள் பரிசை அனுப்பி வைத்துள்ளேன். அதற்கு உங்களது வீட்டு முகவரியை கொடுத்துள்ளேன். பரிசு பொருளின் மதிப்பு ரூ.51 லட்சம் ஆகும். அதனை பெறுவதற்கு பணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பி கவுசல்யா தனது கணவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 1 லட்சத்து 30 ஆயிரத்தை அனுப்பினார்.

மேலும் அந்த நபர் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த கவுசல்யா தனது கணவரிடம் விசாரித்த போது அந்த செல்போன் எண் குறித்து தெரியவில்லை என கூறிவிட்டார். இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கவுசல்யா இதுகுறித்து ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News