உள்ளூர் செய்திகள்

வாலிபருக்கு கத்திக்குத்து

Published On 2023-04-10 09:15 GMT   |   Update On 2023-04-10 09:15 GMT
  • மதுரை அருகே வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.
  • இந்த சம்பவம் தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை

மதுரை அண்ணா மெயின்ரோட்டை சேர்ந்தவர் கார்த்திகேயன் என்ற மன்னர் கார்த்தி (வயது28). இவர் நேதாஜி தெருவில் உள்ள மண்டபம் அருகே நடந்து சென்றார். அங்கு வந்த 6பேர் கும்பல், அவரை கத்தியால் குத்திவிட்டு, மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தி தப்பியது. இது குறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூம்பிசதீஷ், குட்டமணி, ஆந்தை மணி, ராகுல், குண்டுவிஜய் ஆகிய 6 பேரை கைது செய்தனர். விசாரணையில் கார்த்திகேயன் நேதாஜி பற்றி அவமரியாதையாக பேசினாராம். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் அவரை கத்தியால் குத்தியது தெரியவந்தது.

திருப்பரங்குன்றம் பாம்பன் நகரை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது42). இவர் நேற்று மதியம் ஆஞ்சநேயர் கோவில் அருகே நடந்து சென்றார். பின்தொடர்ந்து சென்ற 2பேர் சிவலிங்கத்தை கல்வீசி தாக்கி செல்போனை பறித்து தப்பியது. இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநகர் வேழவர் தெருவை சேர்ந்த சுதாகரன் மகன் கவிக்காரன் (24), கீழத்தெரு மாரிமுத்து மகன் செந்தூர்பாண்டி (22) ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

Similar News