உள்ளூர் செய்திகள்

குழித்துறை அருகே செண்டை மேள பெண் கலைஞர் தற்கொலை காதல் விவகாரம் காரணமா? போலீசார் விசாரணை

Published On 2022-10-20 07:05 GMT   |   Update On 2022-10-20 07:05 GMT
  • இதுகுறித்து மார்த்தா ண்டம் போலீசில் புகார் செய்ய ப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் இருந்த அக்சயாவுக்கு, அவரது காதலன் போன் செய்து உன்னை கோவிலுக்கு அழைத்துச் செல்ல வருகிறேன். தயாராக இரு என்று கூறினாராம்.
  • ஆனால் அவர் தான் கோவிலுக்கு வர முடியாது என பதற்றத்துடன் கூறிஉள்ளார். அதன்பிறகு தான் அக்சயா தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

குழித்துறை, அக். 20-

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை அடுத்த மருதங்கோடு கழுவந்திட்டை காலனியை சேர்ந்தவர் ஸ்ரீ சுமா. இவரது கணவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார்.

அதன் பிறகு ஸ்ரீசுமா தனது 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவரது இளைய மகள் அக்சயா (வயது 16), செண்டை மேள கலைஞர்.

இவர் திருமணம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு பேண்ட் வாத்தியம் இசைக்கும் தொழில் செய்து வந்தார். அப்போது உடன் பணி புரிந்த வாலிபர் ஒரு வருடன் காதல் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த அக்சயா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். அவரை 108- ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அக்சயா பரிதா பமாக இறந்தார்.

இதுகுறித்து மார்த்தா ண்டம் போலீசில் புகார் செய்ய ப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் இருந்த அக்சயாவுக்கு, அவரது காதலன் போன் செய்து உன்னை கோவிலுக்கு அழைத்துச் செல்ல வருகிறேன். தயாராக இரு என்று கூறினா

ராம்.

ஆனால் அவர் தான் கோவிலுக்கு வர முடியாது என பதற்றத்துடன் கூறிஉள்ளார். அதன்பிறகு தான் அக்சயா தற்கொலை முடிைவ எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

Tags:    

Similar News