உள்ளூர் செய்திகள்

மங்கலம்பேட்டை அருகே புதிய பைபாஸ் சாலையில் ஆட்டோ மீது கார் மோதி முதியவர் பலி: 2 பேர் படுகாயம்

Published On 2023-05-03 09:32 GMT   |   Update On 2023-05-03 09:32 GMT
  • இன்று காலை மங்கலம்பேட்டை அருகே, பைபாஸ் ரோடு சந்திப்பில் வந்துக் கொண்டிருந்த ஆட்டோவின் மீது, அதி வேகமாக வந்த கார் மோதியது.
  • இதில் ஆட்டோவில் பயணம் செய்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலூர்:

சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டத்தின் கீழ், விருத்தாசலம், மங்கலம்பேட்டை, உளுந்தூர்பேட்டை வரையில் பைபாஸ் சாலை அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது.   இந்நிலையில், இன்று காலை மங்கலம்பேட்டை அருகே, மங்கலம்பேட்டை - புல்லூர் சாலை மற்றும் பைபாஸ் ரோடு சந்திப்பு அருகே வந்துக் கொண்டிருந்த ஆட்டோவின் மீது, புதிய பைபாஸ் சாலையில் அதி வேகமாக வந்த கார் மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஆட்டோ டிரைவர் உள்பட மற்றொருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மங்கலம்பேட்டை போலீசார், விபத்தில் இறந்த முதியவர் யார்?, படுகாயமடைந்தவர்கள் எந்த ஊரைச்சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News