உள்ளூர் செய்திகள்
வால்பாறையில் கரடி தாக்கி முதியவர் படுகாயம்
- திடீரென செடிக்குள் மறைந்திருந்த கரடி அய்யப்பனை தாக்கியது.
- அவருக்கு வனத்துறையினர் சிகிச்சைக்காக ரூ.5 ஆயிரம் வழங்கினர்.
வால்பாறை,
வால்பாறை அருகே உள்ள இஞ்சிப்பாறை எஸ்டேட் தேயிலை தோட்டத்தில் பணியாற்றி வருபவர் அய்யப்பன் (57). இவர் நேற்று இஞ்சிப்பாறை எஸ்டேட் கீழ் டிவிசனில் செடிகளுக்கு மருந்து அடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென செடிக்குள் மறைந்திருந்த கரடி இவரை தாக்கியது. படுகாயம் அடைந்த இவரை சக தொழிலாளர்கள் உடனடியாக மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வனத்துறையினர் சிகிச்சைக்காக ரூ.5 ஆயிரம் வழங்கினர்.