உள்ளூர் செய்திகள் (District)

இலவச கண்சிகிச்சை முகாம்

Published On 2022-08-20 10:11 GMT   |   Update On 2022-08-20 10:11 GMT
  • இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.
  • 8 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெறுகிறது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் லயன்ஸ் கிளப் சார்பில் நாளை (21ம்தேதி) இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.

பெரம்பலூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், பெரம்பலூர் லயன்ஸ் கிளப் ஆகியவற்றின் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் நாளை (21ம்தேதி) காலை 8 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெறுகிறது.

இதில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் கலந்துகொண்டு பரிசோதனை செய்து இலவசமாக மருந்து மாத்திரைகளும். கண்கண்ணாடிகளும் வழங்கவுள்ளனர். மேலும் அறுவை சிகிச்சை செய்ய தேர்வு செய்யப்படுவோருக்கு மதுரை அரவிந்த் கண்மருத்துவமனையில் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்படும்.

எனவே கண்புரை, சர்க்கரை நோய், கண்நீர் அழுத்த நோய், குழந்தைகள் கண்நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து, கண்ணின் கருவிழியில் புண் போன்ற கண்தொடர்பான பிரச்சனை உடையவர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு சிகிச்சை பெற்று பயன்பெறலாம் என லயன்ஸ் கிளப் தலைவர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

முகாமில் கலந்து கொள்பவர்கள் தவறாமல் முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tags:    

Similar News