உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் நாளை ரேஷன் குறைதீர் முகாம்

Published On 2023-05-12 05:59 GMT   |   Update On 2023-05-12 05:59 GMT
  • பெரம்பலூரில் நாளை ரேஷன் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது
  • நாளை (13-ந்தேதி) காலை10 மணியளவில் நடைபெறுகிறது

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்பு பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மேலப்புலியூர், தழுதாழை, திருமாந்துரை, நாட்டார்மங்கலம் ஆகிய கிராமங்களில் நாளை (13-ந்தேதி) காலை10 மணியளவில் நடைபெறுகிறது. முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவு பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான, குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News