உள்ளூர் செய்திகள்
- ராமநாதபுரத்தில் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- இளம்பெண்கள் எடுத்துகொள்ள வேண்டிய உணவுகள் குறித்து டாக்டர் விளக்கி பேசினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் ஆரோக்கியா மருத்துவமனை, இன்னர்வீல் கிளப் இணைந்து வளரிளம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இளம்பெண்கள் எடுத்துகொள்ள வேண்டிய உணவுகள் குறித்தும், இயற்கை காய்கறிகள் சாப்பிடுவதன் அவசியம் குறித்தும் ஆரோக்கியா மருத்துவமனை டாக்டர் வித்யா பிரியதர்ஷினி விளக்கினார்.
கிளப் தலைவி ரூபா, செயலாளர் பாக்கியலட்சுமி, முன்னாள் தலைவர் ரேகா, தலைமை ஆசிரியை ஜோ விக்டோரினா, தொழிற்கல்வி ஆசிரியை சிவகாமசுந்தரி உட்பட மாணவிகள் பங்கேற்றனர். மாணவிகளுக்கு இரும்புச் சத்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.