உள்ளூர் செய்திகள் (District)

குறைந்த மின் அழுத்தத்தால் பொதுமக்கள் கடும் அவதி

Published On 2023-06-18 08:44 GMT   |   Update On 2023-06-18 08:44 GMT
  • பனைக்குளம் ஊராட்சியில் குறைந்த மின் அழுத்தத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
  • பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் ஊராட்சியில் வளர்ந்து வரும் பகுதிகளான அர்ரக்மான் பள்ளி வாசல், பொன்குளம் பகுதியில் குறைந்தழுத்த மின்சாரம் வருவதால் மின் சாதனப் பொருட்கள் சேதமடை வதாகவும் சீரான மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீரான மின்சார சப்ளை வராததால் இரவு நேரங்க ளில் கைக்கு ழந்தைகள், கர்ப்பிணிகள், முதி யோர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பினரும் கொசுக்கடியிலும், புழுக்கம் காரணமாகவும் தூக்கத்தை தொலைத்து அவதிப்பட்டு வருகின்றனர்.குறைந்த அழுத்த மின்சாரத்தால் வீடுகள், மற்றும் கடைகளில் பயன்படுத்தக்கூடிய பேன், மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதனப் பொருட்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு விடுகிறது.

இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறுவதோடு இது சம்மந்தமாக பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை சீர் செய்யவில்லை.கோடை வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வரும் வேளையில் இந்த குறைந்தழுத்த மின்சாரம் மேலும் அவதிக்குள்ளாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

எனவே பொதுமக்களின் நலன் கருதி இப்பகுதிக்கு சீரான மின்சாரம் வினியோகம் செய்திட சம்மந்தப்பட்ட துறையின் மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News