- தைராய்டு பரிசோதனை முகாம் நடந்தது.
- ஜமாத் தலைவர் ஜெய்னுலாபுதீன் முன்னிலை வகித்தார்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் தெற்கு மாவட்டம் வாலிநோக்கம் கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தனியார் மருத்துவமனை இணைந்து தைராய்டு பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாமை நடத்தியது. கிளைத் தலைவர் நூர் முகம்மது தலைமை தாங்கினார். ஜமாத் தலைவர் ரஹ்மத்துல்லா, மஸ்ஜித் துல்ஹுதா ஜமாத் தலைவர் ஜெய்னுலாபுதீன் முன்னிலை வகித்தனர்.
த.மு.மு.க. தலைவர் வாவா ராவுத்தர், செயலாளர் சம்சு கனி, மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். கடலாடி ஒன்றியத் தலைவர் முகமது அலி புட்டோ வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக ஹுசைன் கனி, ம.ம.க. மாநில பிரதிநிதி- மாநில செயற்குழு உறுப்பினர் முகம்மது முஹிதுல்லா, வாலிநோக்கம் ஊராட்சி தலைவர் பீர்முகம்மது, ஒன்றிய தலைவர் காதர் சுல்தான் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர். சமூக நீதி மாணவர் இயக்கத்கின் மாவட்ட செயலாளர் ஹபீப் ரஹ்மான் நன்றி கூறினார்.