உள்ளூர் செய்திகள் (District)

கோவை வாலிபரிடம் ரூ.16 லட்சம் மோசடி

Published On 2023-05-12 09:19 GMT   |   Update On 2023-05-12 09:19 GMT
  • 5 ஆயிரத்திற்கு லாபமாக ரூ.6,400 மேலும் பணம் கட்டியுள்ளார்
  • கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை,

கோவை காளப்பட்டி நேருநகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (34). இவரது வாட்ஸ்-அப் எண்ணிற்கு மெசேஜ் வந்தது. அதில், உள்ள லிங்க்கை கிளிக் செய்து உள்ளே நுழைந்தார்.

அதன் மூலம் சதீஷ்குமாரை தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைனில் நாங்கள் கொடுக்கும் பணிகளை முடித்து கொடுத்தால் அதிகம் லாபம் கிடைக்கும் என்றார். மேலும் ஆன்லைன் முதலீடு மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறினார். இதனை உண்மை என நம்பிய சதீஷ்குமார் முதலில் ரூ.5 ஆயிரத்தை அவர் கூறிய வங்கி கணக்கில் முதலீடு செய்தார். அதற்கு லாபமாக சதீஷ்குமாரின் வங்கி கணக்கில் ரூ.6,400 வரவு வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் சிறிது, சிறிதாக சதீஷ்குமார் ரூ.16.79 லட்சம் பணத்தை செலுத்தினார். ஆனால் அந்த மர்ம நபர் கூறிய படி லாப தொகை கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து சதீஷ்குமார் தான் செலுத்திய ரூ. 16.79 லட்சத்தை எடுக்க முயன்றார். ஆனால் அந்த பணத்தை எடுக்க முடியவில்லை. மேலும் அந்த மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

அவர் நூதன முறையில் மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார் இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News