உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.17.85 லட்சம் மோசடி

Published On 2023-05-11 09:09 GMT   |   Update On 2023-05-11 09:09 GMT
  • ரவிச்சந்திரன் கடந்த 2020-ம் ஆண்டிலிருந்து பல்வேறு கட்டங்களாக ரூ.17.85 லட்சம் பணத்தை கொடுத்தார்.
  • ரவிச்சந்திரன் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

கோவை,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள விருதாச்சலம் ரோட்டை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது56). இவர் கோவை மேட்டுப்பாளையம் ரோடு சேரன் நகர் பகுதியில் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பும் நிறுவனத்தை அணுகி வேலைவாய்ப்பு கேட்டு வந்தார்.

அப்போது அந்த நிறுவனத்தின் நிர்வாகி ஜோஸ்வா (34) என்பவர் கனடா உள்பட பல்வேறு நாடுகளில் அதிக சம்பளத்தில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாக கூறினார்.

பணம் கொடுத்தால் வெளிநாடு அனுப்பி பெரிய நிறுவனத்தில் பணியாற்ற வைத்து விடுவோம் என ரவிச்சந்திரனிடம் ஆசை வார்த்தை கூறினார்.இதனை உண்மை என நம்பிய ரவிச்சந்திரன் கடந்த 2020-ம் ஆண்டிலிருந்து பல்வேறு கட்டங்களாக ரூ.17.85 லட்சம் பணத்தை கொடுத்தார்.

பணத்தை வாங்கிய ஜோஸ்வா வேலை வாங்கி தருவதாக காலத்தை கடத்தி வந்தார். இதையடுத்து ரவிச்சந்திரன் பலமுறை கேட்டும் பணத்தை திரும்ப கொடுக்காமல் அலைக்கழித்து மறுத்து விட்டார். இது குறித்து ரவிச்சந்திரன் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News