உள்ளூர் செய்திகள்

விபத்தில் பெண் உள்பட 2 பேர் படுகாயம்

Published On 2023-05-20 08:28 GMT   |   Update On 2023-05-20 08:28 GMT
  • விபத்தில் பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
  • சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சிவகங்கை

சிவகங்கை அருகே பெருமானேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி மாரியம்மாள். இவர் அதே பகுதியை சேர்ந்த பிரபு என்பவரின் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலையோரமாக நின்று கொண்டிருந்த மற்றொரு வாகனம் மீது பிரபு மோதி விட்டார். இதில் மாரியம்மாள் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுபற்றிய புகாரின்பேரில் சிவகங்கை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை அருகே முத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 60). இவர் அதே பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோது விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் அருள்ராஜ் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுபற்றிய புகாரின்பேரில் சிவகங்கை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News