உள்ளூர் செய்திகள்

வீடு புகுந்து பணம்-காமிரா திருட்டு

Published On 2023-05-11 07:49 GMT   |   Update On 2023-05-11 07:49 GMT
  • வீடு புகுந்து பணம்-காமிரா திருடப்பட்டது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் நித்யா(வயது42). இவர் வீட்டை பூட்டிவிட்டு 100 நாள் வேலைக்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து ரூ.50 ஆயிரம் ரொக்கம், காமிராவை திருடிக்கொ ண்டு தப்பினார். மதகுபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரான்மலை பாப்பாபட்டியை சேர்ந்தவர் செல்வம். இவர் சம்பவத்தன்று அங்குள்ள மங்கைபாகர் ஆர்ச் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். அதனை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து எஸ்.வி.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News