உள்ளூர் செய்திகள்

ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டுமான பணிகள்

Published On 2023-06-27 08:20 GMT   |   Update On 2023-06-27 08:20 GMT
  • மானாமதுரையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டுமான பணிகளை நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
  • சார்பு நீதிமன்றம் செயல்பட்டு வருகின்றன.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள சிவகங்கை சாலையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் குற்றவியல், உரிமையியல் நீதிமன்றங்களும், அண்ணா சிலை அருகே வாடகை கட்டிடத்தில் சார்பு நீதிமன்றமும் செயல்பட்டு வருகின்றன.

தற்போது குற்றவியல், உரிமையியல் நீதிமன்றங்கள் செயல்படும் கட்டிடத்துக்கு அருகிலேயே நீதித்துறைக்கு சொந்தமான இடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அப் துல்குத்தூஸ், மஞ்சுளா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், இவர்கள் நீதிமன்ற அலுவல் பணிகளை வருடாந்திர ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சிவகங்கை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி, தலைமை குற்றவியல் நீதிபதி சுதாகர், சார்பு நீதிபதி கீதா, மானாமதுரை நீதிமன்ற நீதிபதி அருண் பாண்டியன் உள்ளிட்டோர் உட னிருந்தனர்.

முன்னதாக, நீதிபதிகளை மானாமதுரை வக்கீல்கள் சங்க தலைவர் கணேசன், செயலர் சுரேஷ்பாபு ஆகியோர் தலைமையிலான வக்கீல்கள் வரவேற்றனர்.

Tags:    

Similar News