உள்ளூர் செய்திகள்

வேன் கவிழ்ந்து விபத்து; 6 பேர் படுகாயம்

Published On 2023-05-11 07:53 GMT   |   Update On 2023-05-11 07:53 GMT
  • வேன் கவிழ்ந்து விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
  • சிவகங்கை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

சிவகங்கை

புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப் பட்டியை சேர்ந்தவர் வரதராஜ் (வயது36). மினிவேன் டிரைவரான இவர் சம்பவத் தன்று சிவகங்கைக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு புறப் பட்டார். சிவகங்கை அருகே கீழக்கவனவயல் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென மினிவேன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் வேன் சாலையோ ரத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் மினி வேனில் பயணம் செய்த சுப்பிரமணி, ஜெயக்குமார், சோணமுத்து, சொர்ணராஜ், முத்துக்குமார், சுந்தர் ஆகி யோர் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் இவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர். இளையான்குடி கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் டேவிட்(35). இவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஆடு குறுக்கே சென்றதால் விபத்தில் சிக்கினார். படுகாயமடைந்த டேவிட் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை குட்டித் திண்ணி இந்திரா நகரை சேர்ந்த 17 வயதுடைய சிறுவர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வாணியங்குடிக்கு சென்ற னர். அப்போது நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது. இதில் 2 பேரும் படுகாய மடைந்தனர். சிவகங்கை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

Tags:    

Similar News