உள்ளூர் செய்திகள் (District)

சுள்ளிபாளையத்தில் மண் மாதிரி சேகரிப்பு விழிப்புணர்வு முகாம்

Published On 2022-10-14 07:40 GMT   |   Update On 2022-10-14 07:40 GMT
  • பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், சோழ சிராமணி அருகே உள்ள சுள்ளி பாளையத்தில் மண் மாதிரி சேகரிப்பு ஆய்வு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
  • விவசாயிக ளிடம் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோ தனை செய்யப்பட்டு ஆய்வு அறிக்கை வழங்கப்பட்டது.

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், சோழ சிராமணி அருகே உள்ள சுள்ளி பாளையத்தில் மண் மாதிரி சேகரிப்பு ஆய்வு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கபிலர்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சின்னதுரை தலைமை தாங்கினார்.

முகாமில் விவசாயிக ளிடம் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோ தனை செய்யப்பட்டு ஆய்வு அறிக்கை வழங்கப்பட்டது. ஆய்வறிக்கையில் பயிர் சாகுபடி செய்ய உள்ள நிலத்தின் கார அமிலதன்மை, தொழுஉரம், பயிருக்கு தேவையான உரங்கள், நுண்ணூட்டச்சத்து மற்றும் பேரூட்டச்சத்துக்கள் உள்ளிட்ட விவரங்கள் விவசாயிகளிடம் தெரி விக்கப்பட்டு அவற்றினை பயன்படுத்தும் அளவு ஆகிய விவரங்களையும் விவசா யிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

விழிப்புணர்வு முகாமில் மூத்த வேளாண்மை அலுவலர் சவுந்தரராஜன், நடமாடும் மண் பரிசோ தனை நிலைய வேளாண் அலுவலர்கள் அருள்ராணி, அன்புச்செல்வி, உதவி வேளாண்மை அலுவலர் ஜெயமணி மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் கதிர்வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News