உள்ளூர் செய்திகள் (District)
ஆசை வார்த்தை கூறி சிறுமி பாலியல் பலாத்காரம்
- வாலிபர் கைது
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் பகுதியை சேர்ந்த 14 வயதுடைய சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
அந்த பகுதியில் உள்ள அஜித்குமார் (வயது 24) என்ற வாலிபருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு பழகி வந்துள்ளார்.
அந்த சிறுமியிடம் அஜித்குமார் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர். இது சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.