உள்ளூர் செய்திகள் (District)

ரெயிலில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

Published On 2023-10-02 07:42 GMT   |   Update On 2023-10-02 07:42 GMT
  • வடமாநிலத்தை சேர்ந்தவர்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

ஜோலார்பேட்டை:

ஒரிசா மாநிலம் பகுதியைச் சேர்ந்த பிஷாய் மாஜ்ஜி (வயது 50). இவருக்கு திருமணம் ஆகி 3 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

இவர் கேரளா மாநிலத்தில் கல் குவாரியில் வேலை செய்து வந்தார் இந்நிலையில் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு ரெயில் மூலம் செல்ல திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து பயணம் செய்தார்.

அப்போது நேற்று அதிகாலை திருப்பத்தூர் ரெயில் நிலையம் அருகே அருகே ஓடும் ரெயிலில் படிக்கட்டில் பயணம் செய்தவர் தவறி விழந்து அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News