உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடக்கிறது - செல்வராஜ் எம்.எல்.ஏ., அறிக்கை

Published On 2022-06-18 10:42 GMT   |   Update On 2022-06-18 10:42 GMT
  • தமிழக மக்களை எவ்வாறு திராவிட உணர்வுடன் வழி நடத்தி சென்று அரசியல் பயணத்தை தொடர வேண்டும்
  • தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட அமைப்புகளால் திராவிட மாடல்பயிற்சி பாசறை நடத்திட வேண்டுகோள்

திருப்பூர் :

திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க.பொறுப்பாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்வர், கழக தலைவர், தந்தைபெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், நீதிக்கட்சி தலைவர்கள்ஆகியோர் வகுத்து கொடுத்த திராவிட கொள்கை மற்றும் செயல்பாடுகளை இன்றைய திராவிட தலைமுறை இளைஞர்கள், மாணவர்கள் அறிந்து அதன்படி எதிர்காலத்தில் திராவிட கொள்கையால் தமிழகத்தையும், தமிழக மக்களையு ம்எவ்வாறு திராவிட உணர்வுடன் வழி நடத்தி சென்று அரசியல் பயணத்தை தொடர்ந்திட தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட அமைப்புகளால் திராவிட மாடல்பயிற்சி பாசறை நடத்திட வேண்டு கோள்விடுத்ததை அடுத்து திருப்பூர் மத்தியமாவட்ட தி.மு.க. சார்பில் திருப்பூர் ராஜாராவ் வீதியில் அமைந்துள்ள மாவட்டக் கழக அலுவலகமான கலைஞர் அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் 19.6.2022(ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை9மணிக்கு திருப்பூர் மத்திய மாவட்டக் கழகப்பொறுப்பாளரும், அரசு உறுதிமொழிக்குழு உறுப்பினருமான க.செல்வராஜ்எம்.எல்.ஏ., ஆகிய எனது தலைமையில் மாநகர பொறுப்பாளர்கள்டி.கே.டி.மு.நாகராசன், மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் ஆகியோர்முன்னிலையிலும் நடக்கிறது.

அதேபோல் திருப்பூர் ஒன்றியம், பெருமாநல்லூர் எம்.எல்.ஆர். திருமணமண்டபத்தில் ஒன்றியப் பொறுப்பாளர் எஸ்.விஸ்வநாதன் முன்னிலையிலும்,வேலம்பாளையம் பகுதி, காந்தி நகர் முத்தனச்செட்டியார் மண்டபத்தில் பகுதிபொறுப்பாளர் கொ.ராமதாஸ் முன்னிலையிலும், அண்ணா காலனி பகுதி,புதியபேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள காமாட்சியம்மன் செங்குந்தர்மணடபத்தில் பகுதி செயலாளர் அ.செல்வராஜ் முன்னிலையிலும், பாண்டியன்நகர் பகுதி, வாவிபாளையம் கொங்கு கலையரங்கத்தில் பகுதி செயலாளர்வெ.ஜோதி முன்னிலையிலும், கொங்கு நகர் பகுதி, கருணாகரபுரி சர்கார்பழனிசாமி மண்டபத்தில் பகுதி செயலாளர் போலார் சம்பத்குமார்முன்னிலையிலும் நடக்கிறது

வாலிபாளையம் பகுதி, மன்னரை உமையாள் மண்டபத்தில்பகுதி செயலாளர் மு.க.உசேன் முன்னிலையிலும், நல்லூர் பகுதி, காங்கயம் ரோடுகாயத்திரி மஹாலில் பகுதி பொறுப்பாளர் மேங்கோ அ.பழனிசாமிமுன்னிலையிலும், கருவம்பாளையம் பகுதி, ஏபிடி ரோடு, விஸ்வகர்மா திருமணமண்டபத்தில் பகுதி செயலாளர் மியாமி அ.அய்யப்பன் முன்னிலையிலும் திராவிடமாடல் பயிற்சி பாசறைக்கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர்சுப.வீரபாண்டியன், நாஞ்சில் சம்பத் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

எனவே திருப்பூர் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதிமற்றும் வட்ட, ஊராட்சி உட்கிளை நிர்வாகிகள், இளைஞர் அணி, மாணவர் அணிஅமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தொ.மு.ச. நிர்வாகிகள், உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள், உடன் பிறப்புகள் ஆகியோர் அந்தந்த பகுதிகளில் நடைபெறும்நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்குறிப்பாக இளைஞர் அணி, மாணவர் அணி உடன்பிறப்புகள் தவறாதுவெண்சீருடை அணிந்து கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறுஅறிவுறுத்தப்படுகிறார்கள்.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News