உள்ளூர் செய்திகள் (District)

தண்டவாள பராமரிப்பு பணி - திருப்பூர் வரும் ரெயில் சேவையில் மாற்றம்

Published On 2023-05-04 05:30 GMT   |   Update On 2023-05-04 05:30 GMT
  • திருச்சியில் இருந்து பாலக்காட்டுக்கு இயக்கப்படும், பாசஞ்சர் ெரயில் (எண்: 16843) ஈரோடு வரை மட்டும் இயங்கும்.
  • நாளை (5ந் தேதி) நாகர்கோவிலில் இருந்து கோவை வரும் எக்ஸ்பிரஸ் ஈரோட்டுடன் நிறுத்தப்படும்.

திருப்பூர்:

சேலம் கோட்ட ரெயில்வே பொது மேலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு ரெயில் நிலையம் - தொட்டிபாளையம் இடையே கான்கீரிட் சிலாப் மாற்றப்பட்டு, தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது.இதனால் நாளை 5-ந்தேதி, திருச்சியில் இருந்து பாலக்காட்டுக்கு இயக்கப்படும், பாசஞ்சர் ெரயில் (எண்: 16843) ஈரோடு வரை மட்டும் இயங்கும். திருப்பூர், சோமனூர் செல்லாது.

அதைப்போல் மறுமார்க்கமாக, மே, 6-ந் தேதி, பாலக்காட்டுக்கு பதில், ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு பாசஞ்சர் (எண்:16322) இயக்கப்படும். இதைப்போல் நாளை (5ந் தேதி) நாகர்கோவிலில் இருந்து கோவை வரும் எக்ஸ்பிரஸ் ஈரோட்டுடன் நிறுத்தப்படும். திருப்பூர், கோவைக்கு வராது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News