உள்ளூர் செய்திகள் (District)
படவேடு பகுதியில் சமத்துவ பொங்கல் விழா
- துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகம் முன்பு பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் துணை தலைவர் குமார், வார்டு உறுப்பினர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடைகள் வழஙகப்பட்டது.முடிவில் இளநிலை உதவியாளர் வீரமணி நன்றி கூறினார்.