உள்ளூர் செய்திகள் (District)

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

Published On 2023-01-04 08:48 GMT   |   Update On 2023-01-04 08:48 GMT
  • தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது
  • பயிற்சியில் மொத்தம் 90 ஆசிரியர்களும், கருத்தாளர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

உப்பிலியபுரம்:

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்விதுறையின் சார்பாக திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியத்திலுள்ள 1 முதல் 3ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் மூன்றாம் பருவத்திற்கான தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் உப்பிலியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முகாமில் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஜோதிமணி, உப்பிலியபுரம் வட்டார கல்வி அலுவலர்கள் ரேவதி, ராஜ்குமார், சிவக்குமார், வட்டார வளமையம் மேற்பார்வையாளர், சரவணன், பயிற்றுநர்கள் சிவனேசன், புவனேஸ்வரி கண்ணன், பிரியதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டனர். பயிற்சியில் மொத்தம் 90 ஆசிரியர்களும், கருத்தாளர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


Tags:    

Similar News