உள்ளூர் செய்திகள் (District)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது

Published On 2023-09-16 08:44 GMT   |   Update On 2023-09-16 08:44 GMT
  • போக்சோவில் நடவடிக்கை
  • ஜெயிலில் அடைத்தனர்

வேலூர்:

வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, அங்கு வந்து அவரது உறவினரான புத்தூர் பகுதியை சேர்ந்த சிலை செய்யும் தொழிலாளி பிரபாகரன் (33) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, பிரபாகரனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News