உள்ளூர் செய்திகள்

காளீஸ்வரி கல்லூரியில் பரிசளிப்பு விழா

Published On 2023-03-26 09:09 GMT   |   Update On 2023-03-26 09:09 GMT
  • காளீஸ்வரி கல்லூரியில் பரிசளிப்பு விழா நடந்தது.
  • விழாவில் 1,050 மாணவர்கள் கலந்து கொண்டு பரிசு பெற்றனர்.

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பரிசளிப்பு விழா நடந்தது. கல்லூரியின் பல்வேறு துறைகள் மற்றும் சங்கங்கள் 2022-23 கல்வியாண்டில் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் தலைமை தாங்கி பரிசுகள் வழங்கினார். அவர் பேசுகையில், மாணவர்கள் கல்வியிலும், கல்வி சார்ந்த பிற தகுதிகளையும் வளர்த்து கொண்டு சிறந்த விளங்க வேண்டும். போட்டிகளில் பரிசு பெறுவதைக் காட்டிலும் போட்டிகளில் கலந்து கொள்வதே சிறப்பானது. அனைத்துப் போட்டிகளிலும் மாணவர்கள் தயங்காமல் கலந்து கொள்ள வேண்டும் என்றார். முதல்வர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார்.

துணை முதல்வர் முத்துலட்சுமி வரவேற்றார். கணிதத்துறைத் தலைவர் லலிதாம்பிகை நன்றி கூறினார். விழாவில் 1,050 மாணவர்கள் கலந்து கொண்டு பரிசு பெற்றனர். 

Tags:    

Similar News