உள்ளூர் செய்திகள்

தனியார் நிறுவன ஊழியர்-முதியவர் பரிதாப சாவு

Published On 2023-05-31 08:59 GMT   |   Update On 2023-05-31 08:59 GMT
  • தனியார் நிறுவன ஊழியர்-முதியவர் பரிதாபமாக இறந்தார்.
  • நெல்லை கோடீஸ்வரன் நகரை சேர்ந்த நரேன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஓ.மேட்டுப்பட்டி பாண்டி யன்நகரை ேசர்ந்தவர் கமலக்கண்ணன்(வயது36). இவர் விருதுநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தினமும் வேலைக்கு மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம். அதன்படி நேற்று இரவு கமலக்கண்ணன் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

விருதுநகர்-மதுரை ரோட்டில் வந்தபோது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் கமலக்கண்ணன் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். உடல்நிலை மோசமாகவே மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.ஆனால் வழியலேயே கமலக்கண்ணன் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக அவரது மனைவி சேர்மா தேவி கொடுத்த புகாரின்பே ரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.

முதியவர்

சாத்தூர் அருகே உள்ள பெரிய ஓடைப்பட்டியை சேர்ந்தவர் சுப்புராஜ்(67). இவர் சம்பவத்தன்று வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். சாத்தூர்- கோவில்பட்டி ரோட்டை கடக்க முயன்ற போது வேகமாக வந்த கார் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட சுப்புராஜ் படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த நெல்லை கோடீஸ்வரன் நகரை சேர்ந்த நரேன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News