- கடனை திருப்பி செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்டார்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை
கோவை பாப்பநாயக்கன் பாளையம் அருகே உள்ள சாந்திமேட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி கீதா (வயது 48). இவர் கடந்த செப்டம்பர் மாதம் அவரது மூத்த மகனுக்கு திருமணம் செய்து வைத்தார். திருமண செலவுக்காக அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கி இருந்தார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடிய மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த கீதா திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கீதாவை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.