செய்திகள்

இமாச்சல பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 4 பேர் பலி

Published On 2018-06-01 05:01 GMT   |   Update On 2018-06-01 05:01 GMT
இமாச்சல பிரதேசம் தியோக் பகுதிக்கு அருகே மலைப் பாங்கான பாதையில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிம்லா:

மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த பகுதி இமாச்சல பிரதேசம் ஆகும். இம்மாநிலத்தின் தியோக் பகுதி அருகே இன்று காலை அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்து ஓட்டினரின் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் சரிந்தது.

இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 26 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News