செய்திகள்
இமாச்சல பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 4 பேர் பலி
இமாச்சல பிரதேசம் தியோக் பகுதிக்கு அருகே மலைப் பாங்கான பாதையில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிம்லா:
இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 26 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.