செய்திகள் (Tamil News)

பா.ஜனதா வெற்றி பெற்றாலும் மோடி பிரதமர் ஆக மாட்டார் - சரத்பவார் சொல்கிறார்

Published On 2019-03-13 05:30 GMT   |   Update On 2019-03-13 05:30 GMT
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றாலும் மோடி பிரதமர் ஆக மாட்டார் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். #SharadPawar #PMModi
மும்பை:

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும். அதே நேரத்தில் கடந்த தேர்தலை போன்று பா.ஜனதாவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காது என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் கருத்து தெரிவித்து இருக்கிறார். மும்பையில் நடைபெற்ற தனது கட்சி விழாவின் போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும். அதே நேரத்தில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தான் ஆட்சி அமைக்க முடியும்.

இத்தகைய தருணத்தில் மோடி பிரதமராக ஆதரவு கிடைக்காது. எனவே அவர் 2-வது தடவை மீண்டும் பிரதமராக மாட்டார்.



நாளையும் (14-ந் தேதி), நாளை மறுதினம் (15-ந் தேதி) டெல்லியில் மாநில கட்சிகளை சந்தித்து மெகா கூட்டணி அமைப்பதுகுறித்து ஆலோசனை நடத்த இருக்கிறேன்.

மராட்டியத்தில் காங்கிரஸ் - தேசிய வாத காங்கிரஸ் கூட்டணியில் சில மாநில கட்சிகள் பிரிந்து சென்றுவிட்டன. ஆனால் விவசாய தொழிலாளர் கட்சி (பி.டபிள்யூ.பி.) தேசிய வாத காங்கிரசை தொடர்ந்து ஆதரிக்கிறது. அதற்கு பாராட்டு தெரிவிக்கிறேன்.

மேலும். ‘சுவாபிமனி ஷெட்கரி சங்காதனா’ கட்சியுடன் தொகுதி ஒதுக்கீடு குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம். விவசாயிகள் முன்னணி கட்சிக்கு காங்கிரஸ் கட்சியிடம் சில எதிர்பார்ப்பும் உள்ளன. இது குறித்து காங்கிரசும், தேசிய வாத காங்கிரசும் முடிவு செய்யும்’ என்றார். #SharadPawar #PMModi
Tags:    

Similar News