அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்படுகிறாரா?- டெல்லி மந்திரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
- டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணை இடத்த மத்திய அமைப்பு முடிவு.
- அமலாக்கத்துறை மூன்று முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகவில்லை.
டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை மூன்று முறை சம்மன் அனுப்பியுடம் அவர் ஆஜராகவில்லை. நேற்று 3-வது முறையாக ஆஜராகவில்லை.
இந்த நிலையில் இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்த வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்படலாம் என டெல்லி மாநில மந்திரி ஆதிஷி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிஷி தனது எக்ஸ் பக்கத்தில் "நாளை (இன்று) காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்த இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லி மந்திரி ஆதிஷி
அதிஷியின் எக்ஸ் பக்க பதவி டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சிபிஐ சுமார் 9 மணி நேரம் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியது. இருந்த போதிலும் இந்த வழக்கில் அவரை குற்றவாளி என சேர்க்கவில்லை. நவம்பர் 2-ந்தேதி மற்றும் டிசம்பர் 21-ந்தேதிகளில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்து. நேற்று 3-வது முறையாக ஆஜரான சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.