இந்தியா (National)

சந்திரயான் 3 விண்கலம் திட்டமிட்டபடி நாளை நிலவில் தரையிறங்கும்- இஸ்ரோ

Published On 2023-08-22 07:19 GMT   |   Update On 2023-08-22 07:19 GMT
  • ஆகஸ்ட் 23-ந்தேதி தரையிறங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தள்ளிப்போக வாய்ப்பு என்ற செய்தி வெளியானது
  • திட்டமிட்டபடி நாளை மாலை 6.04 மணிக்கு தரையிறங்கும் என தற்போது அறிவிப்பு

சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர், நாளை மாலை நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்பின் நேரத்தில் சற்று மாற்றம் செய்யப்பட்டது.

இதற்கிடையே சந்திரயான் தரையிறங்குவது 27-ந்தேக்கு தள்ளிப்போகலாம் என்ற செய்தி வெளியானது. இந்த நிலையில், நாளை திட்டமிட்டபடி லேண்டர் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

தற்போது லேண்டர் நிலவில் இருந்து 70 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. அதன் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News