இந்தியா (National)

அயோத்தியில் 161 அடி உயர ராமர் கோயில் கோபுரம் கட்டும் பணி தொடங்கியது

Published On 2024-10-03 12:38 GMT   |   Update On 2024-10-03 12:38 GMT
  • ஏழு கோயில்களும் அடுத்த நான்கு மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • முனிவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஏழு கோயில்களைக் கட்டும் பணியும் வேகம் பெற்றுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில், 161அடி உயர ராமர் கோயிலின் கோபுரத்தின் கட்டுமானப் பணிகள் இன்று தொடங்கியது. இது, 4 மாதங்களில் நிறைவடையும் என்று கோயில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

ராமர் கோயிலின் கோபுரத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கியவுடன், இங்குள்ள வளாகத்தில் ஏழு முனிவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஏழு கோயில்களைக் கட்டும் பணியும் வேகம் பெற்றுள்ளது என்று மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இந்த ஏழு கோயில்களும் அடுத்த நான்கு மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராமர் கோயில் கட்டும் பணியை விரைவுபடுத்தவும், பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் பணியாளர்களை அதிகரிப்பது குறித்தும், தேவைப்பட்டால் தொழில்நுட்பக் குழுவை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்தும் ஆலோசிக்க இன்று முதல் மூன்று நாள் ஆய்வுக் கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, மிஸ்ரா இன்று அயோத்தி சென்றடைந்தார்.

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் கடந்த ஜனவரி 22-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கும்பாபிஷேகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News