இந்தியா (National)

குஜராத்தில் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்

Published On 2024-10-13 18:05 GMT   |   Update On 2024-10-13 18:05 GMT
  • குஜராத்தில் 518 கிலோ எடை கொண்ட போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
  • இதன் சர்வதேச மதிப்பு 5,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அகமதாபாத்:

டெல்லி போலீசார் மற்றும் குஜராத் போலீசார் இணைந்து நடத்திய சோதனையில் ரூ.5,000 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

போதை பொருட்களுக்கு எதிரான பூஜ்ய சகிப்புதன்மை கொள்கை அடிப்படையில் போலீசார் கூட்டாக இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்படி, அங்லேஷ்வர் பகுதியில் உள்ள ஆவ்கார் என்ற மருந்து நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 518 கிலோ எடை கொண்ட கொகைன் என்ற போதை பொருள் பறிமுதல் இன்று கைப்பற்றப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.5,000 கோடி என கூறப்படுகிறது.

கடந்த 1-ம் தேதி மஹிபால்பூர் பகுதியில் துஷார் கோயல் என்பவரின் குடோனில் டெல்லி போலீசின் சிறப்பு பிரிவினர் சோதனை நடத்தி 562 கிலோ எடை கொண்ட கொகைன் மற்றும் 40 கிலோ எடை கொண்ட ஹைடிரோபோனிக் மரிஜுவானா போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், டெல்லி ரமேஷ் நகரில் உள்ள கடை ஒன்றில் இருந்து கடந்த 10-ம் தேதி 208 கிலோ எடை கொண்ட கொகைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், கைப்பற்றப்பட்ட இந்த போதைப் பொருளானது பார்மா சொல்யூஷன் சர்வீஸ் என்ற மருந்து விற்பனை நிறுவனத்திற்கு உரியது என்பதும், இவை ஆவ்கார் என்ற மருந்து நிறுவனத்தில் இருந்து வந்துள்ளதும் தெரிய வந்தது. கடந்த 2 வாரத்தில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Tags:    

Similar News