இந்தியா

அனைவருக்கும் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ளது: குமாரசாமி

Published On 2022-08-04 03:42 GMT   |   Update On 2022-08-04 03:42 GMT
  • 113 இடங்களில் எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ அக்கட்சியே ஆட்சிக்கு வர முடியும்.
  • யாரை ஆதரிக்க வேண்டும் என்பது குறித்து மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.

பெங்களூரு :

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சித்தராமையா பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவருக்கு விழாவில் ஒரு அஞ்சலி கூட செலுத்தவில்லை.

கட்சி தொண்டருக்கே உரிய மரியாதை வழங்காத சித்தராமையா வீராவேசமாக பேசுகிறார். நாங்கள் எங்கள் கட்சி சார்பில் ஜனதா ஜலதாரே மாநாடு நடத்தினோம். அதில் 50 சதவீதத்தை கூட சித்தராமையா பிறந்த நாள் விழா எட்டவில்லை. அனைவருக்கும் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.

ஆனால் 113 இடங்களில் எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ அக்கட்சியே ஆட்சிக்கு வர முடியும். யாரை ஆதரிக்க வேண்டும் என்பது குறித்து மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். கர்நாடக பா.ஜனதா அரசு உடனடியாக சட்டசபையை கூட்ட வேண்டும். மாநிலத்தில் மழை பெய்து பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து விவாதித்து அதற்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Tags:    

Similar News