இந்தியா (National)

பழங்குடியினர் பட்டியலில் "தங்கர்" பிரிவு- மாடியில் இருந்து குதித்த மகாராஷ்டிரா துணை சபாநாயகர்

Published On 2024-10-04 12:04 GMT   |   Update On 2024-10-04 12:13 GMT
  • மகாராஷ்டிரா துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வல், 3 ஆவது மாடியில் இருந்து குதித்து போராட்டம்.
  • துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் , மற்றும் 3 எம்.எல்.ஏ.,க்கள் 3 மாடியில் இருந்து குதித்தனர்.

மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

அமைச்சரவை கூட்டத்தில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர்கள் அஜித் பவார் மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், பழங்குடியினர் பட்டியல் பிரிவில், தங்கர் என்கிற சமூகத்தினர் சேர்க்கப்பட்டதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, மஹாராஷ்டிரா மாநிலத்தின் துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் , மற்றும் 3 எம்.எல்.ஏ.,க்கள் 3 மாடியில் இருந்து குதித்தனர்.

நர்ஹரி ஜிர்வால், தேசிய வாத காங்கிஸ் கட்சி(அஜித் பவார் அணி)யை சேர்ந்தவர். அவருடன் இருந்த 3 எம்.எல்.ஏ.,க்களும் அதே கட்சியை சேர்ந்தவர்கள்.

மகாராஷ்டிராவில் மந்தராலயா என அழைக்கப்படும் தலைமைச்செயலகத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதிக்க முடிவு செய்த துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் மற்றும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மந்த்ராலயாவின் மூன்றாவது மாடியில் இருந்து குதிக்க முடிவு செய்தனர்.

ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விரைந்து வந்த போலீஸ், மாடிகளுக்கு இடையே பாதுகாப்பு வலை விரித்தனர். இதானல், அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் எவ்வித காயங்கள் இல்லாமல் காப்பாற்றப்பட்டனர்.

Tags:    

Similar News