இந்தியா (National)

திருப்பதி பாதயாத்திரையின்போது படியேற முடியாமல் ஓய்வெடுத்த பவன் கல்யாண் - வீடியோ

Published On 2024-10-02 07:43 GMT   |   Update On 2024-10-02 07:43 GMT
  • ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் 11 நாட்கள் பரிகார விரதத்தை தொடங்கினார்.
  • பரிகார பூஜை செய்வதற்காக பவன் கல்யாண் நேற்று மாலை திருப்பதி வந்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் 11 நாட்கள் பரிகார விரதத்தை தொடங்கினார். பரிகார பூஜை செய்வதற்காக பவன் கல்யாண் நேற்று மாலை திருப்பதி வந்தார்.

அலிபிரி நடைபாதை வழியாக மலைக்கு நடந்து சென்றார். பவன் கல்யாணை கண்ட ஏராளமான பக்தர்கள் உற்சாகமடைந்து கோஷங்களை எழுப்பி வரவேற்றனர்.

திருப்பதி பாதயாத்திரையின்போது படியேற முடியாமல் களைப்பில் பவன் கல்யாண் ஓய்வெடுத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

பின்னர் குடும்பத்தினருடன் சென்று வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையான தரிசனம் செய்து லட்டு பரிகார விரதத்தை நிறைவு செய்தார்.

இதனை தொடர்ந்து லட்டுக்கு பரிகார பூஜைகளை செய்தார். அன்னதான கூடத்திற்கு சென்று அன்னதானம் தரமான பொருட்களைக் கொண்டு சுவையாக தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News