இந்தியா

லைவ் அப்டேட்ஸ்- வயநாட்டு முகாமில் உள்ளவர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல்

Published On 2024-08-10 06:16 GMT   |   Update On 2024-08-10 14:07 GMT
  • வயநாடு நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
  • வயநாட்டில் மீட்புப் பணி இன்னும் நடைபெற்று வருகிறது.

கேரள மாநிலம் வயநாடு, சூரல் மலை, முண்டகை, பூஞ்சிரித்தோடு, அட்டமலை ஆகிய இடங்களில் கடந்த மாதம் 30-ம் தேதி அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் மாயமாகிவிட்டனர். மீட்புப் பணி இன்னும் நடைபெற்று வருகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய மந்திரி சுரேஷ் கோபி உள்பட பலர் சென்று, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று கேரளா சென்றடைந்தார்.

2024-08-10 10:54 GMT


வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை ஆய்வு செய்த பிரதமர் மோடி, மீட்புப்பணி தொடர்பான ஆய்வுக் கூட்டம் அவரது தலைமையில் நடைபெற்றது.

2024-08-10 09:39 GMT

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பள்ளி முகாமில் தங்கவைப்பட்டுள்ளனர். அங்கு சென்ற பிரதமர் மோடி கண்கலங்கி நின்ற பாதிக்கப்பட்ட மக்களின் கைகளை பிடித்து ஆறுதல் கூறினார்.

2024-08-10 08:50 GMT

நிலச்சரிவின் கோரத்தால் முண்டகை கிராமம் எவ்வாறு உருக்குலைந்துள்ளது என அதிகாரிகள் விளக்கி கூறினர்.

2024-08-10 08:46 GMT

முண்டகை கிராமத்தில் ராணுவத்தால் அமைக்கப்பட்ட தற்காலிக பாலத்தில் சென்று பிரதமர் மோடி ஆய்வு மேற்கொள்கிறார்.

2024-08-10 08:44 GMT

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டகை கிராமத்தில் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

2024-08-10 08:23 GMT

ராணுவ அதிகாரிகள் நிலச்சரிவின் கோரம் குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கி வருகின்றனர்.

2024-08-10 08:20 GMT

பிரதமருடன் இணைந்து கேரள கவர்னர் ஆரிப்கானும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஆய்வின்போது மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி உடன் இருந்தார்.

2024-08-10 08:14 GMT

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலையில் பிரதமர் மோடி நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

2024-08-10 07:48 GMT

வயநாட்டில் புஞ்சிரிமட்டம், முண்டகை, சூரல்மலை ஆகிய பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

2024-08-10 07:47 GMT

ஹெலிகாப்டர் மூலமாக பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டபோது இருவழிஞ்சி புழா (ஆறு) பிறப்பிடமாக இருக்கும் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவை பார்வையிட்டார்.

Tags:    

Similar News