இந்தியா

ஆந்திராவில் ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை பயணம் சென்ற காட்சி.

ஆந்திராவில் ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை பயணம்

Published On 2022-10-15 05:17 GMT   |   Update On 2022-10-15 05:17 GMT
  • மாதேனஹள்ளி, லட்சுமிபுரம், டிஹீரேஹால், ஓபுலாபுரம் செக் போஸ்ட் வழியாக ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார்.
  • ஜசிரகல்லு சுங்கச்சாவடி அருகே வந்தபோது ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் சைலஜா நாத் மற்றும் மூத்த தலைவர்கள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருமலை:

ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் ஒற்றுமை யாத்திரை பயணம் மேற்கொண்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் நேற்று நடைபயணம் சென்றார். அங்குள்ள சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ராம்புராவில் இருந்து ராகுல் காந்தி நேற்று ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்திற்கு சென்றார்.

ஜசிரகல்லு சுங்கச்சாவடி அருகே வந்தபோது ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் சைலஜா நாத் மற்றும் மூத்த தலைவர்கள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் மாதேனஹள்ளி, லட்சுமிபுரம், டிஹீரேஹால், ஓபுலாபுரம் செக் போஸ்ட் வழியாக ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார்.

அங்கிருந்த பொதுமக்கள் அவருக்கு உற்சாகமாக கையசைத்தனர். இளைஞர்கள் செல்பி எடுத்து ஆரவாரம் செய்தனர்.

இதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஓபுலாபுரத்தில் மாலை 6.30 மணிக்கு ராகுல்காந்தி ஆந்திர எல்லையில் நடைபயணத்தை முடித்தார்.

மீண்டும் கர்நாடக மாநிலம் சென்றார். பெல்லாரியில் உள்ள ஹலகுண்டி மடம் அருகே இரவு தங்கினார்.

மீண்டும் வருகிற 18-ந் தேதி காலை ஆந்திராவில் கர்னூல் மாவட்டத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

தொடர்ந்து 22-ந் தேதி வரை ஆந்திராவில் 100 கிலோ மீட்டர் பாத யாத்திரையை மேற்கொள்ள உள்ளார்.

Tags:    

Similar News