இந்தியா (National)

 ராகுல் காந்தி

சீனாவும், பாகிஸ்தானும் இணைந்து இந்தியாவை தாக்கலாம்- ராகுல் காந்தி

Published On 2022-12-25 23:15 GMT   |   Update On 2022-12-25 23:15 GMT
  • எல்லையில் என்ன நடந்தது என்பதை நாட்டிற்கு மத்திய அரசு சொல்ல வேண்டும்.
  • விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், நாடு பாதிக்கப்படும்.

அருணாசல பிரதேச மாநிலம் தவாங் செக்டரில் அண்மையில் அத்துமீறலில் ஈடுபட்ட சீன வீரர்களை இந்திய ராணுவ வீரர்கள் விரட்டியடித்தனர். இந்த மோதல் காரணமாக இரு நாட்டு எல்லைப் பகுதியில் பதற்றமான நிலை காணப்படுகிறது.

இந்நிலையில் பீஜிங்கில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய சீன வெளியுறவு மந்திரி வாங் யி, எல்லைப்பகுதிகளில் நிலைத்தன்மையை உறுதி செய்வதில் இரு தரப்பும் உறுதியுடன் உள்ளதாகவும், இரு தரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்தியாவுக்கு எதிராக சீனாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இருப்பதாக கூறியுள்ளார். போர் வெடித்தால் அவர்கள் இணைந்து இந்தியா மீது தாக்குதல் நடத்தக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எல்லையில் என்ன நடந்தது என்பதை நாட்டிற்கு மத்திய அரசு சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்ட ராகுல்காந்தி, நாம் என்ன நடவடிக்கை எடுத்தாலும், இப்போதே அதை தொடங்க வேண்டும், உண்மையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், நாடு பாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News