இந்தியா

டெல்லியில் இருந்து பாட்னா சென்ற விமானத்தில் குடிபோதையில் இருந்த 2 பேர் கைது

Published On 2023-01-09 06:40 GMT   |   Update On 2023-01-09 10:56 GMT
  • விமான பயணத்தின் போது குடிபோதையில் இருந்த 2 பயணிகள் கைதாகி உள்ளனர்.
  • குடிபோதையில் இருந்த 2 பேரும் விமானத்தில் எந்த வித பிரச்சினையிலும் ஈடுபடவில்லை என்று விமானி தெரிவித்தார்.

பாட்னா:

ஏர் இந்தியா விமானத்தில் பயணத்தின் போது பெண் பயணி மீது மது அருந்திய மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக அவர் கைதாகி இருந்தார்.

இந்த நிலையில் விமான பயணத்தின் போது குடிபோதையில் இருந்த 2 பயணிகள் கைதாகி உள்ளனர். டெல்லியில் இருந்து பாட்னாவுக்கு நேற்று இன்டிகோ விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் பயணம் செய்த 2 பேர் மது அருந்தி இருந்தனர்.

விமான பயணத்தின் போது இது தெரியவந்தது. மேலும் அவர்கள் 80 நிமிட விமான பயணத்தின் போது தொடர்ந்து மது அருந்த முயன்றனர்.

இது தொடர்பாக பாட்னா விமான போக்கு வரத்து கட்டுப்பாட்டறைக்கு விமானிகள் முறைப்படி தகவல் தெரிவித்தனர்.

பாட்னா விமான நிலையம் வந்தடைந்ததும் குடிபோதையில் இருந்த 2 இன்டிகோ பயணிகளையும் போலீசார் கைது செய்தனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்) உதவியுடன் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

குடிபோதையில் இருந்த 2 பேரும் விமானத்தில் எந்த வித பிரச்சினையிலும் ஈடுபடவில்லை என்று விமானி தெரிவித்தார். அதே நேரத்தில் மது அருந்தி விட்டு பயணம் செய்ததற்காக அவர்கள் மன்னிப்பு கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

விமான பயணத்தின் போது அவர்கள் பீர் கேன்களுடன் வந்து இருந்தனர். இதனால் சி.ஐ.எஸ்.எப். பின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.

Tags:    

Similar News