இந்தியா

விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த நபர்- 14 நாள் நீதிமன்ற காவலில் அடைப்பு

Published On 2023-01-08 16:54 GMT   |   Update On 2023-01-08 16:54 GMT

அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் கடந்த நவம்பர் மாதம் 26-ந் தேதி புறப்பட்டது. அப்போது விமானத்தில் பயணம் செய்த மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா (வயது 34) என்பவர் குடிபோதையில் 70 வயது பெண் மீது சிறுநீர் கழித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூரில் தலைமறைவாக இருந்த அவரை டெல்லி தனிப்படை போலீ சார் கைது செய்தனர். அவரை டெல்லி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

சங்கர் மிஸ்ரா சார்பில் கோர்ட்டில் ஆஜரான வக்கீல் அவருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். சங்கர் மிஸ்ரா தலைமறைவாக இருந்தவர். அவர் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காதவர். எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சங்கர் மிஸ்ராவை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சங்கர் மிஸ்ரா சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News