இந்தியா (National)
நிலவில் தடம் பதித்த லேண்டர் - இஸ்ரோ வெளியிட்ட புகைப்படம்
- சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி சாதனை.
- லேண்டர் தரையிறங்கும்போது எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பு படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:
நிலவின் தென் துருவ பகுதியில் சந்திரயான்- 3 வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.
இதற்கிடையே, நிலவின் தென் துருவத்தில் லேண்டர் தரையிறங்கும்போது எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பு படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
சந்திரயான்- 3 லேண்டருக்கும் பெங்ளூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையே தொலைதொடர்பு இணைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, விக்ரம் லேண்டர் பிடித்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், நிலவில் விக்ரம் லேண்டர் தடம் பதித்த பின்னர் அதன் லேண்டிங் இமேஜர் கேமரா எடுத்த புகைப்படம் ஒன்றை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
அந்தப் புகைப்படத்தில், நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கிய ஒரு பகுதி காட்டப்பட்டு உள்ளது. லேண்டரின் ஒரு கால் பகுதியின் நிழலும் காணப்படுகிறது.