இந்தியா

உடல்நலக்குறைவால் மனைவி தற்கொலை: கணவர் ரெயிலில் பாய்ந்து பலி

Published On 2023-05-30 06:52 GMT   |   Update On 2023-05-30 06:52 GMT
  • மனைவி இறந்ததை கேட்டதும். ரங்கநாயக்கலு அதிர்ச்சியடைந்தார்.
  • தாய், தந்தை இருவரும் இறந்துவிட்டதால் எதுவும் அறியாத 10 மாத குழந்தை தவித்து வருகிறது.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் குடிமிரால்லாவை சேர்ந்தவர் ரங்கநாயக்கலு (வயது 28). இவரது மனைவி லதா (22).

கடந்த 1½ வருடத்திற்கு முன்பு திருமணமானது. தம்பதிக்கு 10 மாத ஆண் குழந்தை உள்ளது.

லதா கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்தும் வயிற்று வலி சரியாகவில்லை.

இந்நிலையில் நேற்று இரவு லதாவுக்கு மீண்டும் கடும் வயிற்று வலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாத அவர் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

இதனைக் கண்ட அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் லதாவை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லதா பரிதாபமாக இறந்தார்.

லதா இறந்தது குறித்து டாக்டர்கள் அவரது கணவர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தனர்.

மனைவி இறந்ததை கேட்டதும். ரங்கநாயக்கலு அதிர்ச்சியடைந்தார். ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே ஓடி சென்றார்.

கர்னூல் அருகே உள்ள துப்பட்டு ரெயில் தண்டவாளம் அருகே சென்றார்.

அந்த வழியாக வந்த ரெயில் முன்பாக பாய்ந்தார். இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரங்கநாயக்கலு பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய், தந்தை இருவரும் இறந்துவிட்டதால் எதுவும் அறியாத 10 மாத குழந்தை தவித்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News