இந்தியா (National)

கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கிறதா? புதிய ஒலிபரப்பு சேவைகள் மசோதா வாபஸ் - மத்திய அரசு

Published On 2024-08-13 05:05 GMT   |   Update On 2024-08-13 05:24 GMT
  • கருத்துக்களை வெளியிடுவதற்கு முன் அதைத் தணிக்கை செய்து சான்றளிக்க பரிந்துரைக்கப்பட்டது
  • எழுத்து மற்றும் பேச்சுச் சுதந்திரத்தை நசுக்கும் வகையில் உள்ளதாகப் பல தரப்பில் இருந்தும் கண்டங்கள் குவிந்தது.

சமூக ஊடகங்களில் இயங்கி வரும் வரும் சுயாதீன கண்டன்ட் கிரியேட்டர்களின் வரம்புகளை நிர்ணயிக்கும் வகையில் அவர்களை, ஒடிடி மற்றும் டிஜிட்டல் செய்தி ஊடகங்களின் நெறிமுறைக்குள் கொண்டுவரவும், அவர்களது கருத்துக்களை வெளியிடுவதற்கு முன் அதைத் தணிக்கை செய்து சான்றளிக்கும் குழுவை அமைக்கும் வகையிலும் மத்திய அரசானது புதிய ஒலிபரப்பு சேவைகள் மசோதாவைக் கொண்டுவந்தது.

கடந்த வருடம் நம்பர் 10 ஆம் தேதி பொதுவெளியில் இந்த மசோதாவை வெளியிட்டது. பொதுமக்கள் இந்த மசோதா மீதான கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என்று அரசு கூறியிருந்தது. அதன்படி, இந்த மசோதா எழுத்து மற்றும் பேச்சுச் சுதந்திரத்தை நசுக்கும் வகையில் உள்ளதாகப் பல தரப்பில் இருந்தும் கண்டங்கள் குவிந்தது. எனவே தற்போது இந்த மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற்றுள்ளது. இதற்கு பதிலாக சம்பந்தப்பட்டவர்களிடம் ஆலோசனை செய்து புதிய வரைவு மசோதா தாயரிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Tags:    

Similar News