சிறப்புக் கட்டுரைகள்

முக சுருக்கங்கள் ஏற்படுவது எதனால்?

Published On 2024-08-12 09:32 GMT   |   Update On 2024-08-12 09:32 GMT
  • அதிக சர்க்கரை உணவு சருமத்தினை வெகுவாய் பாதிக்கின்றது.
  • குழந்தைகளுக்கு சர்க்கரை சேர்ப்பதினை தவிருங்கள்.

கொஞ்ச நாளாக ஆன்மீகமே தொடர்ந்து எழுதுவது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் ஒரு பக்கம் மருத்துவ கருத்துக்கள் விட்டுப் போகின்றதே என்ற கவலையும் நெருடலாய் இருக்கின்றது.

இரண்டும் கலந்து ஒரே கட்டுரையில் கொண்டு வருவது என்பதும் சரிப்படாது. ஆகவே அவ்வப்போது மாற்றி எழுதலாம் என்ற நினைப்பேன் இம்முறை மருத்துவக் கட்டுரையாக எழுதப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஒரு நிகழ்வு. நன்கு அறிந்த ஒரு பெண்மணி. தனது தோற்றத்திற்கு அதிக கவனம் கொடுப்பவர். அதாவது சரும பராமரிப்பு, முடி பராமரிப்பு, ஆரோக்கிய பராமரிப்பு என எல்லாவற்றிலும் கவனமாய் இருப்பவர். அவரை சில வருடங்களுக்கு பிறகு நான் சந்திக்க நேர்ந்தது.

முகத்தில் வயதுக்கு மீறிய கோடுகள், சுருக்கங்கள், முதுமை தோற்றம், நடை, உடை, பாவனை அனைத்துமே மாறி இருந்தது. பார்த்தாலே ஏதோ உடல் நலம் இல்லாதவர் போல் இருந்தார்.

காரணம் கேட்டபோது வாழ்வில் ஏற்பட்ட சில பாதிப்புகள், வேதனைகள் அதிக மன உளைச்சலை தந்ததாகவும் இதனால் சர்க்கரை உணவினை அதிகம் எடுத்துக் கொள்ளும் வழக்கம் ஏற்பட்டது. இதுவே பல உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தியது என்றார்.

சிலருக்கு காலையில் எழுந்தவுடனேயே ஜிலேபி மற்றும் பால் அருந்துவது வழக்கம். சிலர் இட்லி, தோசை, உப்புமா, கஞ்சி என எதற்கும் சர்க்கரை போட்டுக் கொள்வர். சிலர் டீ, காபியினை கூட பாயாசம் போல் சர்க்கரை சேர்த்து அருந்துவர்.

இவர்களுக்கெல்லாம் சீக்கிரமே அதிக முக சுருக்கங்கள் ஏற்படுகின்றன. கொலாஜன் பாதிப்பு ஏற்படுகின்றது.

* அதிக சர்க்கரை உணவு சருமத்தினை வெகுவாய் பாதிக்கின்றது.

* கொலாஜன், எலாஸ்டின் இரண்டுமே சரும கட்டமைப்பிற்கு காரணமாகின்றது.

* அதிக சர்க்கரை உணவு உடலில் வீக்கத்தினை ஏற்படுத்து கின்றது. இந்த வீக்கம் சரும திசுக்களை பாதிக்கின்றது. தொடர் வீக்கம் உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.

* உடலுக்குரிய இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி பெற்று, தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் சக்தியினை உடல் இழக்கின்றது.

* இன்சுலின் எதிர்ப்பு ஏற்படுகின்றது.

* சருமம் சொர சொரப்பாக இருக்கும்.

* சருமத்தில் திட்டு, புள்ளிகள், கறுப்பு போன்றவை ஏற்படுகின்றது.

* சருமம் தொய்ந்து வலுவிழந்து காணப்படுகின்றது.

எனவே சர்க்கரையைத் தவிர்ப்பதே பல நன்மைகளைத் தரும். குழந்தைகளுக்கு சர்க்கரை சேர்ப்பதினை தவிருங்கள். இதில் அனைத்து பிரிவுகளும் அடங்கும். வெள்ளை சர்க்கரை கூடுதல் பாதிப்பினைக் கொடுக்கும். மற்ற பிரிவுகளை எப்போதாவது சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம்.

முதலில் ஒரு மாதம் இவ்வாறு இருந்து பாருங்கள். கேக், சாக்லேட், பிஸ்கட், வெள்ளை சர்க்கரை இனிப்பு இவை அனைத்தையும் ஒரு மாதம் நிறுத்தித்தான் பாருங்களேன்.


கடந்த சில மாதங்களாக வெய்யிலின் கடுமை தாங்காது மயக்கம், ஜுரம், சோர்வு என பாதிப்புக் கடுமையாய் இருந்தன. இதில் 'மைக்ரேன்' பாதிப்பு தலைவலி எனக் கூறியவர்களும் அதிகம்.

இந்த தலைவலி வருவதற்கு முன், வந்த பிறகு, தலைவலி போன பிறகு என்ன அறிகுறிகளைக் காட்டும். முதலில் சில பொதுவான அறிகுறிகளைப் பார்ப்போம்.

* உடைக்கும் தலைவலி அநேகமாக ஒரு பக்கமாக இருக்கும்.

* வெளிச்சம், சத்தம், நல்ல மனம் இவை கூட தொந்தரவாக இருக்கும்.

* எரிச்சலுடன் இருப்பர். முகம், கழுத்து, மண்டை இவற்றில் வலி இருக்கும்.

* மூக்கடைப்பு இருக்கும்.

* வயிற்றுப் பிரட்டல், வாந்தி, தலை சுற்றல் போன்றவை இருக்கும்.

* வயிறு உப்பிசம், ஜீரண கோளாறு இருக்கலாம்.


மைக்ரேன் தலைவலி:

* மைக்ரேன் தலைவலி துடிக்கும் தலைவலியாக இருக்கும்.

* அநேகமாக ஒரு பக்கமாக இருக்கும்.

* வெளிச்சம் ஆகாது. தலை வலியுடன் வயிற்று பிரட்டல் வாந்தி என இருக்கும்.

* சற்றும் நகரக் கூட முடியாது.

* காரணமற்ற சோர்வு, அதிக கொட்டாவி இருக்கும்.

இந்த அறிகுறிகள் சாதா தலைவலியில் இருந்து மாறுபட்டவை. அதிக முறை சிறுநீர் போகும். கொட்டாவி வரும். சிலர் சாக்லேட் சாப்பிட்டவுடன் ஏற்படும். இவை அனைத்தும் 'நான் வந்து விட்டேன்' என மைக்ரேன் சொல்லும் அறிகுறிகள்.

* மனச்சோர்வு, திடீரென்று உடல் சோர்வு, வயிற்றுப் பிரச்சினை, கலங்களான பார்வை. இவை கூட மைக்ரேன் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் உணர்ந்து கொள்ளும் அறிகுறிகளாகத் தெரியும்.

* இந்நேரங்களில் நெய், வெண்ணை, சீஸ், கொட்டை வகைகள், மது, புளித்த உணவுகள், ஊறுகாய் இவற்றினை தவிர்த்து விடுங்கள்.

இது மைக்ரேன் தான் என உணர்ந்தவர்கள் வெளிச்சம், இல்லாத அறையில் இருப்பது, வெகு வெதுப்பான நீரில் ஷவர் முறையில் குளியல் எடுப்பது. மருத்துவர் சிபாரிசு செய்துள்ள மருந்துகளை எடுத்துக் கொள்வது போன்றவற்றினை செய்யலாம். ஆயினும் மருத்துவர் ஆலோசனை இன்றி எந்த மருந்தும் எடுத்துக்கொள்ளக் கூடாது.

* தலைவலி ஆரம்பிக்கும் முன்போ அல்லது அப்போதோ பார்வையில் மாறுதல்கள் ஏற்படலாம்.

* கை, கால், முகம் இவற்றில் குறுகுறுப்பு உணர்வு இருக்கலாம்.

* பேச்சு தடுமாற்றம் இருக்கலாம்.

* காதில் சத்தம், ஒரு பக்க முகம், உடல் பலமிழந்தது போல் இருக்கலாம்.

* இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடி மருத்துவர் ஆலோசனை பெற வேண்டியவை.

* மைக்ரேன் பெண்களுக்கு ஆண்களை விட அதிகமாக ஏற்படுகின்றது.

* குடும்ப ரீதியாகவும் பரம்பரை ரீதியாகவும் ஏற்படுகின்றது.

* அதிக மன உளைச்சல், படபடப்பு, தூக்கமின்மை இவை இந்த பாதிப்பினை கூட்டலாம்.

* ஹார்மோன் மாறுபாடு ஏற்படும் காலங்கள், சீதோஷ்ண நிலை மாறுபடும் காலங்கள், சில வகை மருந்துகள் அதிக உடற்பயிற்சி, புகையிலை, சிகரெட், சில வகை உணவுகள் ஆகியவற்றாலும் இந்த பாதிப்பு ஏற்படலாம்.

மருத்துவ கருத்துக்கள் விழிப்புணர்விற்காக எழுதப்படுபவை தானே தவிர, தானே முடிவு செய்து தானே சிகிச்சை செய்து கொள்வ தற்காக அல்ல. ஆக படியுங்கள். அறிந்து கொள்ளுங்கள். ஆனால் மருத்துவர் ஆலோசனை இன்றி எந்த சிகிச்சையும் செய்து கொள்ளாதீர்கள்.


* நீங்கள் முயற்சி செய்யாமல் வேகமான எடை குறைவு ஏற்படும் போது

* தொடர் சோர்வு இருப்பது. போதுமான ஓய்வு எடுத்தும் சோர்வாகவே இருப்பது.

* தொடர்ந்து வலி எந்த காரணமும் இன்றி இருப்பது, சாதாரண வலி நிவாரணிகள் மூலம் பயன் இல்லாது இருப்பது.

* உடல் மஞ்சள் நிறம், கண்ணில் மஞ்சள் நிறம், உடல் அரிப்பு போன்றவை (இது மஞ்சள் காமாலை பாதிப்பால் இருப்பதுதான். என்றாலும் மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது)

* சரும மரு, மச்சம் இவற்றில் மாற்றம், சரும புண்கள் ஆறாது. ரத்தம் கசிதல்.

* கழிவு வெளிப் போக்கில் ரத்தம், அடிக்கடி வயிற்றுப் போக்கு அடிக்கடி மலச்சிக்கல்.

* சிறுநீர் செல்லும் போது வலி நிற மாற்றம்.

* விழுங்குவதில் கடினம்.

* மாத விலக்கு சுற்றில் மாற்றம் போன்றவை உடனடி யாக மருத்துவர் கவனம் பெற வேண்டியவை.

Tags:    

Similar News