விளையாட்டு (Sports)

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் வில்வித்தை: இந்தியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது துருக்கி

Published On 2024-07-29 15:15 GMT   |   Update On 2024-07-29 15:15 GMT
  • துருக்கிக்கு எதிராக முதல் 2 செட்டை இந்தியா இழந்தது.
  • துருக்கி 6-2 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.

பாரீஸ் ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டியில் இந்தியா - திருக்கி அணிகள் மோதின. இந்தியாவின் சார்பில் திராஜ் பொம்மாதேவரா, தருண்தீப் ராய், பிரவீன் ரமேஷ் ஜாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதல் செட்டில் இந்திய வீரர்கள் 53 புள்ளிகளும் துருக்கி 57 புள்ளிகளும் பெற்றது. இதனால் முதல் செட்டில் துருக்கி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 2-வது செட்டில் இந்தியா 52-ம் துருக்கி 55-ம் பெற்றதால் 4-0 என்ற கணக்கில் மீண்டும் முன்னிலை பெற்றது.

3-வது செட்டில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் 55 புள்ளிகளும் துருக்கி 54 புள்ளிகள் பெற்றது. இதனால் 3-வது செட்டில் இந்தியா 2-4 என ஸ்கோர் கணக்கை தொடங்கியது. அதனை தொடர்ந்து நடந்த 4-வது செட்டை 54- 58 என்ற கணக்கில் துருக்கி கைப்பற்றியது.

இறுதியில் துருக்கி 6-2 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

Tags:    

Similar News