செங்கல்பட்டு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் வெற்றி பெற்றது செல்லும் - ஐகோர்ட்டு தீர்ப்பு
சென்னை:
செங்கல்பட்டு தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் வெற்றி பெற்றது செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆப்பூர் வரலட்சுமி மதுசூதனன்.
இவரது வெற்றியை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் வெங்கடேசன் என்பவர் ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ரவிசந்திர பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி வரலட்சுமி மதுசூதனன் மனுதாக்கல் செய்தார்.
மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.நீலகண்டன் ஆஜராகி, இந்த வழக்கு அடிப்படை முகாந்திரம் எதுவும் இல்லாமல் தொடரப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கான எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் வெற்றி பெற்றது செல்லும் என்று தீர்ப்பளித்தார். #Highcourt #DMK #Election